விஷூ பண்டிகை: சென்னை-கண்ணூர் இடையே சிறப்பு கட்டண ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


விஷூ பண்டிகை: சென்னை-கண்ணூர் இடையே சிறப்பு கட்டண ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 5 April 2023 5:46 AM GMT (Updated: 5 April 2023 5:52 AM GMT)

விஷூ பண்டிகை கேரளாவில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

விஷூ பண்டிகையை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக சென்னை-கண்ணூர் இடையே சிறப்புக் கட்டண ரெயில் இயக்கப்படவுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல்.13-ம் தேதி பிற்பகல் 3.10 மணிக்கு சிறப்புக் கட்டண ரெயில் (06047) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு கண்ணூர் சந்திப்பை சென்றடையும்.

மறுமார்க்கமாக, கண்ணூரில் இருந்து ஏப்ரல் 14-ம் தேதி காலை 8.35 மணிக்கு சிறப்புக் கட்டண ரெயில் (06048) புறப்பட்டு, அதேநாள் இரவு 10.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

இந்தரயில் அரக்கோணம், காட்பாடி,ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு,திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்புக் கட்டண ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது.

தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story