மீனவர்கள் கைது விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம் - திமுக எம்.பி டி.ஆர்.பாலு


மீனவர்கள் கைது விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம் - திமுக எம்.பி டி.ஆர்.பாலு
x

டெல்லியில், மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக மத்திய இணை மந்திரி முரளிதரனை திமுக எம்.பி டி.ஆர்.பாலு சந்தித்து பேசினார்.

டெல்லி,

டெல்லியில், மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக மத்திய இணை மந்திரி முரளிதரனை திமுக எம்.பி டி.ஆர்.பாலு சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி டி.ஆர்.பாலு கூறியதாவது,

தமிழக மீனவர்கள் கைதான விவகாரம் தொடர்பாக மத்திய இணை மந்திரி முரளிதரனை சந்தித்து பேசியுள்ளோம். இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும் அவரிடம் வழங்கி உள்ளோம்.

மீனவர்கள் கைது விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். மீனவர்களை விடுதலை செய்வது, படகுகளை மீட்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணை மந்திரி முரளிதரன் உறுதி அளித்துள்ளார்.

மேலும், மீனவர்களின் கைது நடவடிக்கை தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தொடர்ந்து இலங்கை அரசை வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story