ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திமுக மக்கள் பணி செய்யும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திமுக மக்கள் பணி செய்யும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

இந்தியாவை காப்பாற்ற வேண்டுமென்றால் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன் இல்ல திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவ்விழாவில் அவர் பேசியதாவது,

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் நாளை மறுநாள் தொடங்கப்பட உள்ளது. திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின் 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். மீதமுள்ள வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்.

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திமுக மக்களை பற்றி மட்டுமே சிந்திக்கும், மக்கள் பணி செய்யும். நாடாளுமன்ற தேர்தல் திட்டமிட்டப்படி நடக்குமா அல்லது முன்கூட்டியே நடக்குமா என்ற பேச்சு எழுகிறது.

எப்போது தேர்தல் வந்தாலும் அதில் 40க்கு 40 என திமுக வெற்றி பெறும். இந்தியாவை காப்பாற்ற வேண்டுமென்றால் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்தபின் 7 ஆண்டுகளில் பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆட்சியை பிடித்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story