காட்டுயானைகள் அட்டகாசம்

காட்டுயானைகள் அட்டகாசம்
வால்பாறை
வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் உள்ள கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்குள் நேற்று இரவு 8.30 மணிக்கு காட்டு யானைகள் கூட்டம் நுழைந்தது. இதில் 2 காட்டு யானைகள் தொழிலாளர்களின் குடியிருப்புகளில் இருந்த 8 வீடுகளின் கதவு, ஜன்னலை உடைத்து அட்டகாசம் செய்தன. இதை கண்ட தொழிலாளர்கள், வால்பாறை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். தொடர்ந்து வனத்துறையினர் கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





