2 குட்டிகளுடன் காட்டு யானைகள் முகாம்


2 குட்டிகளுடன் காட்டு யானைகள் முகாம்
x
தினத்தந்தி 4 Oct 2023 7:45 PM GMT (Updated: 4 Oct 2023 7:45 PM GMT)

கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் 2 குட்டிகளுடன் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளது.

நீலகிரி

கோத்தகிரி அருகே குஞ்சப்பனை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பலா மரங்களில் தற்போது சீசன் முடிந்தும் கூட பலா மரங்களில் காய்கள் காய்த்துள்ளன. சீசன் நேரத்தில் பலாப் பழங்களை உண்பதற்காக சமவெளிப் பகுதிகளில் இருந்து இப்பகுதிக்கு வந்த காட்டு யானைகள் திரும்பி செல்லாமல் இதே பகுதிகளில் முகாமிட்டுள்ளன. இவ்வாறு வந்து முகாமிட்டுள்ள காட்டு யானைகள் கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் அடிக்கடி உலா வருவதுடன், சாலையோரங்களில் நின்ற வண்ணம் உள்ளது. இந்தநிலையில் நேற்று காலை முள்ளூரில் இருந்து தட்டப்பள்ளம் செல்லும் மேட்டுப்பாளையம் பிரதான சாலையோரத்தில் 2 குட்டிகளுடன் 3 காட்டு யானைகள் நின்றுக் கொண்டிருந்தன. இதைக்கண்ட அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி ஆர்வத்துடன் யானைகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துச் சென்றனர். மேலும் இதுபற்றி அறிந்ததும் வனத்துறையினர் அங்கு சென்று காட்டு யானைகளை கண்காணித்தனர்


Next Story