கடப்பாரையால் அடித்து பெண் படுகொலை


கடப்பாரையால் அடித்து பெண் படுகொலை
x
தினத்தந்தி 5 July 2023 9:31 PM GMT (Updated: 6 July 2023 11:55 AM GMT)

தஞ்சையில், சொத்து விற்றது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கடப்பாரையால் பெண்ணை அடித்துக்கொன்ற அவரது கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சையில், சொத்து விற்றது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கடப்பாரையால் பெண்ணை அடித்துக்கொன்ற அவரது கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சொத்து விற்பனை

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள ஈஸ்வரி நகரை அடுத்து உள்ள தனலட்சுமி நகரை சேர்ந்தவர் லாரன்ஸ் சேவியர்(வயது 53). இவர் எல்.ஐ.சி. முகவராக வேலை பார்த்து வந்தார். தற்போது அந்த வேலையை விட்டு விட்டு வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இவருக்கு அல்போன்சா(48) என்ற மனைவியும், சவுமியா என்ற 9-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். இந்த நிலையில் தனது பெயரில் இருந்த சொத்தை, சமீபத்தில் தனது கணவர் லாரன்ஸ் சேவியர் பெயருக்கு அல்போன்சா மாற்றி உள்ளார். அந்த சொத்தை மனைவிக்கு தெரியாமல் லாரன்ஸ் சேவியர் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

கடப்பாரையால் அடித்துக்கொலை

இந்த தகவல் அல்போன்சாவுக்கு தெரிய வந்தது. இதுகுறித்து அவர் தனது கணவர் லாரன்ஸ் சேவியரிடம் கேட்டுள்ளார். அப்போது இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாகவே தகராறு இருந்து வந்த நிலையில் நேற்று மீண்டும் இது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரம் அடைந்த லாரன்ஸ் சேவியர், அல்போன்சாவை அடித்துள்ளார். அப்போதும் ஆத்திரம் தணியாத அவர் அருகில் கிடந்த கடப்பாரையை எடுத்து அல்போன்சாவின் தலையில் தாக்கி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அல்போன்சா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

கணவர் கைது

இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மற்றும் மருத்துவக்கல்லூரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அல்போன்சாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து லாரன்ஸ் சேவியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story