மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி


மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
x

கொடைரோடு அருகே மின்சாரம் பாய்ந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

திண்டுக்கல்

கொடைரோடு அருகே உள்ள பள்ளப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வேலாயுதபுரத்தை சேர்ந்தவர் நாகராஜ். அவருடைய மகன் சூர்யா (வயது 22). இவர், பள்ளப்பட்டியை சேர்ந்த தனபாண்டி என்பவரின் ஒர்க் ஷாப்பில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சூர்யா, ஒர்க் ஷாப்பில் ஒரு வேனை வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக அங்கு கிடந்த வயரில் இருந்து மின்சாரம் சூர்யா மீது பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் சூர்யாவின் தந்தை நாகராஜ் புகார் அளித்தார். அதில், தனது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன், சப்-இன்ஸ்பெக்டர் கருப்பையா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story