100-வது மன் கி பாத் நிகழ்ச்சி; அமெரிக்காவில் இந்திய வம்சாவளி, நண்பர்களுடன் இணைந்துள்ளேன்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்


100-வது மன் கி பாத் நிகழ்ச்சி; அமெரிக்காவில் இந்திய வம்சாவளி, நண்பர்களுடன் இணைந்துள்ளேன்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
x

100-வது மன் கி பாத் நிகழ்ச்சியை கேட்க அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மற்றும் நண்பர்களுடன் இணைந்துள்ளேன் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

நியூஜெர்சி,

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக அக்டோபர் 3-ந்தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதன்பின்னர், மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

இதன்படி, 2-வது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார்.

பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை 11 மணியளவில் ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. இதனை வெற்றியடைய செய்யும் நோக்கில், பா.ஜ.க. முழு அளவில் தயாராகி வருகிறது. நிகழ்ச்சியை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒலிபரப்ப பா.ஜ.க. முழு அளவில் தயாராகி வருகிறது.

இங்கிலாந்தில் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சியை நடத்த இந்திய சமூகத்தினர் ஏற்பாடு செய்து உள்ளனர். இதேபோன்று, அமெரிக்காவிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதுபற்றி மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் தனது டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், 100-வது மன் கி பாத் நிகழ்ச்சியை கேட்க அமெரிக்காவின் நியூஜெர்சியில் இந்திய வம்சாவளி மற்றும் நண்பர்களுடன் இணைந்துள்ளேன் என தெரிவித்து உள்ளார்.


Next Story