

உத்தரபிரதேசம் ராம் நகரைச் சேர்ந்த பர்வேஷ் அலி கான் என்பவர், சவுதி அரேபியாவின் டமாம் நகரில் கடந்த 20 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கடந்த 30-ம் தேதி தனது மனைவி, மகள், மகனுடன் அல்-கோபார் கடற்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அப்போது, கடல் அலையில் துள்ளிக்குதித்து விளையாடிக்கொண்டிருந்த இவரது 15 வயது மகள் சாஹர் பர்வேஷ் திடீரென மயக்கமடைந்தார்.
உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்ட தாகத் தெரிவித்தனர்.