அதி நவீன ரகசிய மின்காந்த ரெயில் துப்பாக்கி பொருத்திய சீன போர்க்கப்பல்


அதி நவீன  ரகசிய மின்காந்த ரெயில் துப்பாக்கி பொருத்திய சீன போர்க்கப்பல்
x
தினத்தந்தி 3 Feb 2018 4:51 PM IST (Updated: 3 Feb 2018 4:51 PM IST)
t-max-icont-min-icon

உலகின் முதல் மின்காந்த ரெயில் துப்பாக்கியை ( ஏவுகணையை செலுத்த ) பொருத்திய போர்க்கப்பலை சீன கொண்டு உள்ளது. #railgun

வாஷிங்டன் உலகின் முதல் மின்காந்த ரெயில் துப்பாக்கியை ( ஏவுகணையை செலுத்த ) பொருத்திய போர்க்கப்பலை சீன கொண்டு உள்ளது. அமெரிக்கா உள்பட மேற்கு நாடுகளில் உருவாக்கப்பட்ட எந்தவொரு உபகரணங்களையும்விட இது அதிக சக்தி வாய்ந்ததாகும். சீன இராணுவம் ஸ்டார் வார்ஸ் பாணியிலான ஆயுதத்தை பரிசோதிக்கிறது. ஆன்லைனில் ஆபத்தான இந்த ஆயுதத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. மின்காந்த சக்தி ரெயில் துப்பாக்கியால் நம்பமுடியாத அதிக வேகங்களில் மற்றும் நிண்ட தூரத்திற்கு பொருள்களை ஏவுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

மிக் 7 ரக போர் விமானத்தை வேகத்தை மிஞ்சுகிறது. இது ஒலியை விட 7 மடங்கு அதிகம் 160 கிமீட்டர் தூரம் செல்லும். சீனா இந்த ஆயுதத்தை மிகவும் ஆர்வமாக கருதுகிறது. ஏனெனில் இது ஒரு ஏவுகணை தூரத்தை அடைகிறது. ஆனால் ஒரு பீரங்கி வேகம் உள்ளது. ஹய்யாங் ஷான் கப்பல் போல தெரிகிறது.

இதில் மின்சாரம் வழங்குவதற்கு புதிய டார்ட் நிறுவப்பட்ட மற்றும் கொள்கலன்களைக் கொண்டுள்ளது.கப்பலில் ஏற்றப்பட்ட பீரங்கி கப்பல் அளவை ஒப்பிடுகையில் பெரியது. சீன கடற்படைத் தலைவர்கள் பெரும்பாலும் ஹுபிய மாகாண கப்பல் படையை இரகசிய இராணுவ சோதனைகளை நடத்துவதற்கு பயன்படுத்துகின்றனர்.

ரெயில்துப்பாக்கியை விரைவில் சீனா பயன்படுத்தும் என நிபுணர்கள் அஞ்சுகிறார்கள். இந்த ஆயுதம் அமெரிக்காவின் ரெயில் துப்பாக்கி அமைப்பில் உள்ளது. கடந்த அக்டோபர் மாதம்  சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தை மேம்படுத்தி வருகிறது. இதன் மூலம் மின்காந்த இராணுவத் தொழில்நுட்பத்தில் பணியாற்றிக் கொண்டிருப்பதாக வெளிப்படுத்தியது.
1 More update

Next Story