

டோக்கியோ,
ஜப்பான் வெளியுறவுத் துறை மந்திரி இந்திய வெளியுறவு மந்திரிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மூன்று நாட்கள் பயணமாக ஜப்பான் சென்றார்.
இந்த நிலையில், தலைநகர் டோக்கியோவில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை, சுஷ்மா சுவராஜ் சந்தித்தார். இந்தியா - ஜப்பான் இருதரப்பு உறவுகள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.