ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குல் மதகுருமார்கள் உள்பட 14 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
காபூல்
ஆபகானிஸ்தான் தலைநகர் காபூலில் முக்கிய மதகுருமார்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது இதில் 14 பேர் உயிரிழந்தனர்.உயிரிழந்த 14 பேரில் 7 பேர் மத குருக்கள் மற்றும் 4 பேர் பாதுகாப்பு படை வீரர்கள் ஆவர். மீதமுள்ள 3 பேர் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்த கூட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மதகுருமார்கள் தற்கொலை குண்டுவெடிப்புக்கு எதிராக ஒரு பத்வாவை வெளியிட்டனர் . யுத்தத்தை நிறுத்தவும், போர் நிறுத்த உடன்படிக்கைக்கு உடன்படவும் ஆப்கானிய அரசாங்கப் படைகளும் தலிபான் மற்றும் பிற போராளிகளும் குருமார்கள் சபை கேட்டுக்கொண்டது. இது இரு தரப்பினருக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்தது. இது முதல் முறையாக சபை அத்தகைய வேண்டுகோளை வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் எந்த இயக்குமும் பொறுப்பு ஏற்கவில்லை.
மேலும் இந்த தாக்குதலில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story






