சுறாக்கள் மத்தியில் புகைப்படம் எடுத்த போது மாடல் அழகிக்கு நேர்ந்த கதி


சுறாக்கள் மத்தியில் புகைப்படம் எடுத்த போது மாடல் அழகிக்கு நேர்ந்த கதி
x
தினத்தந்தி 12 July 2018 3:49 PM IST (Updated: 12 July 2018 3:49 PM IST)
t-max-icont-min-icon

சுறாக்கள் மத்தியில் புகைப்படம் எடுத்த போது மாடல் அழகியை கடித்து குதறின.


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், கடலுக்குள் நீச்சலடித்த மாடல் அழகியை ராட்சத சுறாமீன்கள் சுற்றி வளைத்து கடித்துக் குதறின.

எச்சரிக்கைப் பலகையைப் பொருட்படுத்தாமல், கத்ரினா எலி ஜரதுஸ்கி என்பவர் நீச்சல் உடையில் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, சுற்றியிருந்த சுறாமீன்கள் அவரைக் கடித்துக் குதறின. சுறாவிடமிருந்து விடுபட்டு ரத்தம் சொட்ட அவர் வேகமாக நீந்தினார்.

மற்ற சுறாக்கள் ரத்த ருசி காணும் முன்பு தப்பிவந்த கத்ரினா மருத்துவமனைக்குச்  கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
1 More update

Next Story