செல்பி மோகம் 3 ஆயிரம் வோல்ட் மின்சார வயரில் மீது விழுந்த சிறுமி


செல்பி மோகம் 3 ஆயிரம் வோல்ட் மின்சார வயரில் மீது விழுந்த சிறுமி
x
தினத்தந்தி 21 July 2018 5:18 AM GMT (Updated: 21 July 2018 6:05 AM GMT)

3 ஆயிரம் வோல்ட் மின்சாரம் செல்லும் வயரின் மீது விழுந்த சிறுமி, அதில் துடி துடித்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் உழியனோவ்ஸ்க் பகுதியில் அமைந்திருக்கும் கிராமத்தில் 13 வயது சிறுமி ஒருவர் தன் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது, அங்கிருந்த ரெயில்வே மேம்பாலத்தில் நின்று செல்பி எடுத்துள்ளார்.

இந்நிலையில் பாலத்தில் நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்த 13 வயது சிறுமி திடீரென்று அங்கிருந்து தவறி ரெயில் செல்வதற்கு பயன்படுத்தப்படும் மின்சார கம்பியின் மீது விழுந்துள்ளார்.சுமார் 3000 வோல்ட் மின்சாரம் செல்லக் கூடிய கம்பியின் மீது விழுந்ததால், அப்பெண் துடி துடித்துள்ளார். இதையடுத்து போன் பேசிக்கொண்டிருந்த சக தோழி திரும்பி பார்த்த போது, தோழி மின்சார கம்பியில் விழுந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து என்ன செய்வது என்றே தெரியாமல் உறைந்து போயுள்ளார்.

அந்த நேரத்தின் ரயில் ஓட்டுனர் சிறுமி மின்சார கம்பியில் விழுந்து துடித்து கொண்டிருப்பதை பார்த்துள்ளார்.அதன் பின் உடனடியாக அவர் அந்த மின்சார கம்பிக்கு செல்லும் மின்சாரத்தை போன் மூலம் அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், சுயநினைவு திரும்பியவுடன் அந்த சிறுமிக்கு நடந்த சம்பவம் குறித்து தெரியவில்லை எனவும், பெரிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

சிறுமியின் பெயர் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.அவர் சுமார் 13 அடி உயரத்தில் மின்சார கம்பியில் தொங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. 

Next Story