ஹபீஸ் சயீத்தின் 2 அமைப்புகள் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இல்லை - பாகிஸ்தான் நீதிமன்றம்

ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இல்லை என பாகிஸ்தான் நீதிமன்றம் கூறி உள்ளது.
ஹபீஸ் சயீத்தின் 2 அமைப்புகள் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இல்லை - பாகிஸ்தான் நீதிமன்றம்
Published on

இஸ்லாமாபாத்,

ஐநாவால் தீவிரவாதி என அறிவிக்கப்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா (ஜுடி) மற்றும் பாலாக்-இ-இன்சானியட் ஃபவுண்டேஷன் (FIF) ஆகியவை ஜனாதிபதி ஆட்சிக் காலத்திலிருந்தே தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் குறிப்பிடப்படவில்லை.

பிப்ரவரியில் முன்னாள் பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹுசைன்,1997 ஆம் ஆண்டு பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை திருத்துவதற்காக ஓர் ஒழுங்குமுறை ஒன்றை வெளியிட்டார். இதனால் ஐ.நா. பாதுகாப்புக் குழுவால் பட்டியலிடப்பட்ட பயங்கரவாத நபர்கள் மற்றும் அமைப்புகளை தடை செய்தார். இந்த சட்டத்தின் கீழ் ஜமாத்-உத்-தவா (ஜேயுடி) மற்றும் ஃபாலா-இ-இன்சானியட் ஃபவுண்டேஷன்(எப்ஐஎப்) ஆகியவை அடங்கும்.

சயீத் ஆலோசகர் ராஜா ரிஸ்வான் அபாசி மற்றும் சோஹைல் வாரிராச் தாக்கல் செய்த மனு மீது வியாழக்கிழமை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் (IHC) தடை செய்யப்பட்ட அணிகளின் பட்டியலில் இல்லை என நீதிமன்றம் கூறியது என தி டான் பத்திரிகை கூறி அறிவித்துள்ளது.

இந்த விவகாரம் தற்போதைய அரசால் நீட்டிக்கப்பட்டிருக்கவில்லை அல்லது பாகிஸ்தானில் நாடாளுமன்றத்தில் ஒரு நடவடிக்கையாக மாற்றப்பட வேண்டும் என்று ஐ.எச்.சி.யின் நீதிபதி ஆமர் பரூக்குக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்பிறகு சயீத்தின் வேண்டுகோளை இனிமேலும் அமல்படுத்த முடியாது என்று நீதிபதி கூறினார்.

பாகிஸ்தான் அரசாங்கம் பயங்கரவாத அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பொருளாதாரத் தடைகளின் பட்டியலில் ஜமாத்-உத்-தவா மற்றும் ஃபாலா-இ-இன்சானியட் ஃபவுண்டேஷன் ஏனையவர்களுக்கு நன்கொடையளிப்பதை தடை செய்திருந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com