உகாண்டா நாட்டில் பஸ் விபத்தில் 19 பேர் பலி


உகாண்டா நாட்டில் பஸ் விபத்தில் 19 பேர் பலி
x
தினத்தந்தி 19 Dec 2018 12:28 PM GMT (Updated: 19 Dec 2018 12:28 PM GMT)

உகாண்டா நாட்டில் மலைப்பாதை வழியே சென்ற பஸ் நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.

கம்பாலா,

உகாண்டா நாட்டில் சரியான சாலைகள் இல்லாததாலும், வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படாததாலும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் உகாண்டா நாட்டின் கப்ச்சோர்வா மாவட்டத்தில் உள்ள கப்ச்சோர்வா - பேல் நெடுஞ்சாலை அருகிலுள்ள மலைப்பாதை வழியே பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென நிலைதடுமாறிய பஸ் மலைமுகட்டில் கவிழ்ந்து விழுந்தது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த அமெரிக்காவை சேர்ந்த  அரசு அமைப்பு அல்லாத  ஊழியர்கள் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 6 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story