இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: போப் ஆண்டவர் கண்டனம்


இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: போப் ஆண்டவர் கண்டனம்
x
தினத்தந்தி 21 April 2019 7:56 PM GMT (Updated: 21 April 2019 7:56 PM GMT)

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக போப் ஆண்டவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு,

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, போப் ஆண்டவர் பிரான்சிஸ், புனித பீட்டர் சதுக்கத்தில் வழக்கம்போல் ஆசி வழங்கி உரையாற்றினார். அதன் நிறைவில், இலங்கை குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:-

பிரார்த்தனைக்காக கூடி இருந்தபோது தாக்கப்பட்ட கிறிஸ்தவர்களுடனான எனது நெருக்கத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். இந்த கொடிய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திக்கிறேன். பலியான அனைவரையும் இறைவனிடம் ஒப்படைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story