அமெரிக்கா-தலீபான்கள் இடையிலான அமைதி ஒப்பந்தம்: ஓரிரு நாட்களில் கையெழுத்தாகும் என எதிர்பார்ப்பு


அமெரிக்கா-தலீபான்கள் இடையிலான அமைதி ஒப்பந்தம்: ஓரிரு நாட்களில் கையெழுத்தாகும் என எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 28 Feb 2020 10:10 PM GMT (Updated: 28 Feb 2020 10:10 PM GMT)

அமெரிக்க அரசு மற்றும் தலீபான்களுக்கு இடையிலான அமைதி ஒப்பந்தம் ஓரிரு நாட்களில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


* அமெரிக்க அரசு மற்றும் தலீபான்களுக்கு இடையிலான அமைதி ஒப்பந்தம் ஓரிரு நாட்களில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டுமென அமெரிக்காவின் ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் சிலர் வலியுறுத்தி உள்ளனர்.

* அமெரிக்காவில் உள்ள எண்ணெய் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த சீனா நாட்டை சேர்ந்த ஒருவர் 1 பில்லியன் டாலர் மதிப்புடைய வர்த்தக தகவல்களை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

* சிரிய அகதிகள் கடல் வழியாகவோ, தரை வழியாகவோ ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதை இனி நாங்கள் தடுக்க மாட்டோம் என்று துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

Next Story