சீனாவில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு, 4 பேர் பலி


சீனாவில்  புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு, 4 பேர் பலி
x
தினத்தந்தி 30 March 2020 3:41 AM GMT (Updated: 30 March 2020 3:41 AM GMT)

சீனாவில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது.

பீஜிங், 

சீனாவின் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வருகிறது. அங்கு புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் 4 பேர் பலியாகினர். 

இதன் மூலம் சீனாவில் ஒட்டு மொத்தமாக பலி எண்ணிக்கை 3,304  ஆக அதிகரித்துள்ளது.  சீனா முழுவதும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 81 ஆயிரத்து 470-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், குணமடைந்தவர்களும் அடங்குவர்.


Next Story