தமிழக மீனவர்கள் 25 பேருக்கு நீதிமன்றக் காவல்

கோப்புப்படம்
தமிழக மீனவர்கள் 25 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது.
நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 5-ந்தேதி தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மீனவர்கள் 25 பேருக்கும் வருகிற 22-ந்தேதி வரை நீதிமன்றக்காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





