ஈரானில் தாக்குதல்: 4 வீரர்கள் பலி; பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு தப்பி ஓட்டம்


ஈரானில் தாக்குதல்:  4 வீரர்கள் பலி; பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு தப்பி ஓட்டம்
x

ஈரானில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 4 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்.



தெஹ்ரான்,


ஈரான் நாட்டில் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு படை என்ற பெயரிலான ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய சிஸ்தன் மாகாணத்தில் சரவான் கவுன்டி பகுதியில் திடீரென வீரர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்தில் 4 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். இந்த தாக்குதலுக்கு பின்னர், பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு தப்பியோடி விட்டனர் என அதுபற்றி அந்நாட்டு ராணுவம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

ஈரானின் கிர்குக் நகரில் நேற்று நடந்த பயங்கரவாத வெடிகுண்டு தாக்குதலில் போலீசார், மக்கள் உள்பட பலர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து உள்ளனர். இந்நிலையில், ஈரானிய ராணுவ வீரர்கள் மீது மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

கடந்த அக்டோபரில் ஈரானின் ஷிராஜ் நகரில் உள்ள ஷா செராக் என்ற வழிபாட்டு தலத்தின் மீது நடந்த ஆயுதமேந்திய கும்பல் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமடைந்தனர்.


Next Story