புனித நகரான மதீனாவில் பூமிக்கு அடியில் அதிக அளவு தங்கம் மற்றும் தாமிரம் கண்டுபிடிப்பு


புனித நகரான மதீனாவில் பூமிக்கு அடியில் அதிக அளவு தங்கம் மற்றும் தாமிரம் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 23 Sep 2022 11:06 AM GMT (Updated: 23 Sep 2022 11:06 AM GMT)

புனித நகரான மதீனாவில் பூமிக்கு அடியில் அதிக அளவு தங்கம் மற்றும் தாமிரம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

மதீனா

புனித நகரமான மதீனா, உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக மாறப்போகிறது. அங்கு பூமிக்கு அடியில் தங்கம் மற்று தாமிரம் இருக்கும் பகுதி கண்டறியப்பட்டு உள்ளது.

சவுதி அரேப்பியாவின் கனிம ஆய்வு மையத்தால் மேற்கொள்ள்பட்ட ஆய்வு ஒன்றில் மதீனா பிராந்தியத்தில் உள்ள அபா அல்-ரஹா எல்லைக்குள் தங்கப் படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சவுதி பிரஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.மேலும் அதே பிராந்தியத்தில் உள்ள அல்-மாடிக் பகுதியில் நான்கு தளங்களில் தாமிரம் தாது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

தங்கம் மற்றும் தாமிர தளங்களின் மூலம் 533 மில்லியன் வருவாயை உருவாக்கும் மற்றும் சுமார் 4,000 வேலைகளை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சவூதி அரேபியா தனது சுரங்கத் துறையில் 10 ஆண்டுகள் இறுதிக்குள் $170 பில்லியன் மதிப்பிலான முதலீட்டை ஈர்க்க விரும்புவதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூறி இருந்தது. இருப்பினும், சுரங்க வளர்ச்சி மற்றும்தோண்டி எடுப்பதன் வேகம் மெதுவாக உள்ளது என்று அல் அரேபியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மதிப்புமிக்க கனிமங்கள், குறிப்பாக தங்கம், தாமிரம் மற்றும் துத்தநாகம் ஆகியவற்றின் விலைகள் உயர்ந்து வருவதால், சவுதி அரேபியாவின் தற்போதைய கனிமச் செல்வத்தின் மதிப்பு, முன்னர் மதிப்பிடப்பட்ட சவுதி ரியால் 5 டிரில்லியன் ($1.3 டிரில்லியன்) யிலிருந்து இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கிறது

இதுகுறித்து சவுதி புவியியல் ஆய்வின் நிர்வாக இயக்குனர் அப்துல்லா அல்-ஷாம்ராணி கூறியதாவது:-

துத்தநாகத்தின் தற்போதைய மதிப்பு கடந்த காலத்தில் சவுதி ரியால் 1,000 இலிருந்து 3,000 ஆக அதிகரித்தது, அதே நேரத்தில் தாமிரத்தின் விலை ஒரு டன் சவுதி ரியால் 2,500 லிருந்து 10,000 ஆக உயர்ந்தது.

சவூதி அரேபியாவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் உலோகங்களை ஆராய்வதற்கான செலவினங்களை மூன்று மடங்காக உயர்த்துவது நாட்டின் கனிம வளத்தை மேலும் அதிகரிக்கும். அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் ஒரு சதுர மீட்டருக்கு சவுதி ரியால் 220 க்கு ஏறக்குறைய மூன்று மடங்கு ஆய்வுச் செலவை உருவாக்குவதே இதன் நோக்கம்.

நாட்டில் உள்ள சுரங்கத் தளங்களின் எண்ணிக்கை 5,500ஐத் தாண்டும். கோபால்ட், லித்தியம், டைட்டானியம், அரிய பூமி இது இவை அனைத்தும் திறமையாக பயன்படுத்தப்பட்டால் எதிர்காலத்தை இன்னும் நிலையானதாக மாற்றும். எதிர்காலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பற்றி பேசுகிறது மற்றும் நல்ல விஷயம் என்னவென்றால், சவுதி அரேபியாவில் அந்த கனிமங்கள் உள்ளன.

நாட்டில் காணப்படும் பிற மூலோபாய கனிமங்களில் தாமிரம், துத்தநாகம் மற்றும் சவுதி சிலிக்கா ஆகியவை அடங்கும் என கூறினார்.




Next Story