'பிரச்சினைக்குரிய பகுதி' காஷ்மீரில் ஜி20 மாநாடு நடத்த சீனா எதிர்ப்பு - மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என அறிவிப்பு...!


பிரச்சினைக்குரிய பகுதி காஷ்மீரில் ஜி20 மாநாடு நடத்த சீனா எதிர்ப்பு - மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என அறிவிப்பு...!
x

பிரச்சினைக்குரிய பகுதிகளில் ஜி20 மாநாடு நடத்துவதை எதிர்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

பிஜிங்,

நடப்பு ஆண்டு ஜி20 கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமை வகிக்கிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு ஜி20 மாநாடுகள் அனைத்தும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, ஜி20 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள், பாதுகாப்புத்துறை மந்திரிகள் மட்டத்திலான மாநாடு ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது. டெல்லி, கோவா உள்ளிட்ட பகுதிகளில் இந்த மாநாடு நடைபெற்றது.

இந்நிலையில், ஜி20 மாநாட்டில் சுற்றுலாதுறை தரப்பிலானா மாநாடு ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஸ்ரீநகரில் நாளை மறுதினம் தொடங்கி மூன்று நாட்கள் (22ம் தேதி முதல் 24-ம் தேதி வரை) நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஜி20 நாடுகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், காஷ்மீரில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் ஜி20 அமைப்பில் உறுப்பினராக உள்ள சீனா பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளது. பிரச்சினைக்குரிய பகுதியில் மாநாடு நடத்தப்படுவதாக தெரிவித்துள்ள சீனா இந்த மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், எந்த விதமான சர்ச்சைக்குரிய பகுதியிலும் ஜி20 மாநாட்டை நடத்துவதை சீனா கடுமையாக எதிர்க்கிறது. இது போன்ற மாநடுகளில் சீனா பங்கேற்காது' என கூறினார்.

காஷ்மீரில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் சீனா பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளன நிலையில் துருக்கியும் காஷ்மீர் ஜி20 மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், சவுதி அரேபியாவும் இந்த மாநாட்டில் பங்கேற்பது குறித்து இதுவரை முடிவு எடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.


Next Story