கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் மரணம்


கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் மரணம்
x

Image Courtesy: AFP

கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் தனது 82வது வயதில் மரணமடைந்தார்.

ஏதேன்ஸ்,

கிரீஸ் நாட்டின் மன்னாராக 1964 முதல் 1973 வரை பதவி வகித்தவர் 2-ம் கான்ஸ்டென்னின். இவர் தனது 23-ம் வயதில் கிரீசின் மன்னராக அரியணை ஏறினார். கிரீசில் மன்னாராட்சி முறைக்கு 1967-ம் ஆண்டு எதிர்ப்பு எழுந்த நிலையில் 2-ம் கான்ஸ்டெனினின் நாட்டை விட்டு வெளியேறினார். பின்னர், 1974-ம் ஆண்டு மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு மக்களாட்சி நடைமுறைக்கு வந்ததால் அவர் அதிகாரப்பூர்வமாக மன்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மக்களாட்சி மலர்ந்த நிலையில் பின்னர் நாடு திரும்பினார்.

இதனிடையே, கிரீஸ் நாட்டின் கடைசி மன்னரான 2-ம் கான்ஸ்டெனினின் இன்று மரணமடைந்தார். வயது முதர்வு, உடல்நலக்குறைவு காரணமாக தனது 82 வயதில் அவர் மரணமடைந்தார். உடல்நலக்குறைவு காரணமாக ஏதேன்சில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 2-ம் கான்ஸ்டெனினின் மரணமடைந்ததாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story