ஜப்பானில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவு

ஜப்பானின் இபராக்கி மாகாணத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

டோக்கியோ,

'ரிங்க் ஆப் பயர்' எனப்படும் புவி தட்டுக்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் பகுதியில் ஜப்பான் இருப்பதால் அங்கு நிலநடுக்கங்கள் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகும்.

இந்நிலையில் ஜப்பானின் கிழக்கில் உள்ள இபராக்கி மாகாணம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இன்று காலை 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (ஜே.எம்.ஏ.) தெரிவித்துள்ளது.

ஜப்பானின் இபராக்கி மாகாணத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் அச்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. இதனைத்தொடர்ந்து மத்திய டோக்கியோவிலும் நிலநடுக்கம் பெரும்பாலும் உணரப்பட்டது.

நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 9:08 மணிக்கு தெற்கு இபராக்கி மாகாணத்தில் சுமார் 50 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. ஜப்பானின் நில அதிர்வு தீவிரம் அளவுகோலில் குறைந்த 5 அளவைக் கொண்டது, இது ஏழு மணிக்கு உச்சத்தை எட்டுகிறது என்று வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com