மோடி அரசாங்கத்தின் கீழ் இந்திய ஜனநாயகம் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது - சிட்னி பல்கலைக்கழக பேராசிரியர்!


மோடி அரசாங்கத்தின் கீழ் இந்திய ஜனநாயகம் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது - சிட்னி பல்கலைக்கழக பேராசிரியர்!
x

இந்திய ஜனநாயகத்தின் தரம் குறைந்து வருவதாக சர்வதேச விமர்சகர்களால் முன்வைக்கப்படும் தரவு ஏமாற்றும் அறிகுறிகளைக் காட்டுகிறது.

சிட்னி,

இந்தியாவின் ஜனநாயகம் சக நாடுகளை விட சிறந்த ஆரோக்கியத்துடன் உள்ளது என்று சிட்னி பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் சமூக விஞ்ஞானியான சால்வடோர் பாபோன்ஸ் தெரிவித்துள்ளார்.

தி ஆஸ்திரேலியா டுடே இதழுக்கு எழுதிய கட்டுரையில் அவர் கூறியிருப்பதாவது:-

இந்திய ஜனநாயகம் பற்றிய மிக மோசமான தவறான விமர்சனங்கள் உண்மையில் பாரதிய ஜனதா கட்சியின் மீதான விமர்சனங்களைத் தவிர வேறில்லை. இந்த விமர்சனங்கள் பாஜகவின் உள்நாட்டு அரசியல் எதிரிகளால் அது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் ஆகும்.

பின்னர் இந்த விமர்சனங்கள் கல்வியாளர்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு இந்திய அறிவுசார் சமூகங்களால் விரிவுபடுத்தப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றன.

தனிப்பட்ட இந்தியர்கள், நரேந்திர மோடி மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தைப் பற்றி என்ன நினைத்தாலும், இந்திய ஜனநாயகம் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதையே பல சான்றுகளும் காட்டுகின்றன.

ஒப்பீட்டளவில் ஏழ்மையான ஒரு நாட்டில் ஜனநாயகத்தை எவ்வாறு நடத்துவது என்ற சிக்கலை இந்தியா தீர்த்துவிட்டதாகத் தெரிகிறது. உலகமே இந்தியாவை ஜனநாயக வெற்றியின் முன்மாதிரியாக பார்க்க வேண்டும்.

இந்திய ஜனநாயகத்தின் தரம் குறைந்து வருவதற்கான ஆதாரமாக சர்வதேச விமர்சகர்களால் முன்வைக்கப்படும் தரவு வேண்டுமென்றே ஏமாற்றும் அறிகுறிகளைக் காட்டுகிறது.ஜனநாயக தரவரிசையை செய்யும் அமைப்புகளுக்கு பொறுப்பு உள்ளது. ஆனால் இந்த அமைப்புகள் தாங்களாகவே அரசியல்மயமாகி நம்பகத்தன்மையை இழந்து வருகின்றன.

இவ்வாறு மத்திய அரசுக்கு ஆதரவான புள்ளிவிவரங்களை அவர் விவரித்துள்ளார். மேலும், தி ஆஸ்திரேலியா டுடேக்கு அளித்த பேட்டியில் பாபோன்ஸ் கூறியதாவது:-

"முந்தைய அரசாங்கத்தின் செயல்கள் பாஜகவுக்கு விமர்சனம் வர காரணம். சர்வதேச விமர்சகர்களால் தரவரிசையில் அனைத்து வகையான தவறுகள் உள்ளன. பல தவறுகள், அரசியல்மயமாக்கல் உள்ளன.

சில சமீபத்திய சர்வதேச மதிப்பீடுகள், பாஜக தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக விருப்பமான ஊகங்கள், தவறான புள்ளிவிவரங்கள் மற்றும் ஆர்வலர்களின் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டுள்ளன" என்றார்.


Next Story