தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் வாயேஜர்-2 செயற்கைக்கோளை மீட்டெடுத்த நாசா


தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் வாயேஜர்-2 செயற்கைக்கோளை மீட்டெடுத்த நாசா
x

தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் வாயேஜர்-2 செயற்கைக்கோளை நாசா மீட்டெடுத்துள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா 1977-ம் ஆண்டு வாயேஜர்-2 என்ற செயற்கைக்கோளை அனுப்பியது. இது தற்போது பூமியில் இருந்து சுமார் 2 ஆயிரத்து 400 கோடி கிலோ மீட்டர் தொலைவில் சுற்றி வருகிறது. சூரிய குடும்பத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட இந்த செயற்கைக்கோள் கடந்த 46 ஆண்டுகளாக நாசாவுடன் தொடர்பில் உள்ளது. நாசா விஞ்ஞானிகள் கணிப்பின்படி வருகிற 2027-ம் ஆண்டு வரை இந்த செயற்கைக்கோள் செயல்பாட்டுடன் இருக்கும் என கூறப்பட்டது. ஆனால் கடந்த 2 வாரங்களாக செயற்கைக்கோளில் இருந்து எந்தவித தகவல்களும் வரவில்லை.

இதனையடுத்து ஆஸ்திரேலியாவின் ரேடியோ டிஷ் ஆன்டெனாவில் அதிக ஆற்றல் கொண்ட டிரான்ஸ்மீட்டரை பயன்படுத்தி ஒரு புதிய கட்டளையை நாசா அனுப்பியது. இதன்மூலம் வாயேஜர்-2 செயற்கைக்கோளின் தொடர்பு மீட்டெடுக்கப்பட்டு மீண்டும் தகவல் வர தொடங்கி உள்ளது.


Next Story