'பிரிக்ஸ்' நாடுகள் கூட்டமைப்பில் சேர ஈரான் விண்ணப்பம்


பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பில் சேர ஈரான் விண்ணப்பம்
x

Image Courtesy: AFP

‘பிரிக்ஸ்’ நாடுகள் கூட்டமைப்பில் சேர ஈரான் விண்ணப்பித்துள்ளது.

தெஹ்ரான்,

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து 'பிரிக்ஸ்' என்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது. வளர்ந்து வரும் நாடுகளில் முக்கிய இடத்தில் உள்ள இந்த 5 நாடுகளும் பொருளாதாரம், அரசியல், வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்படும் நோக்கத்தோடு 'பிரிக்ஸ்' கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

இதனிடையே, பிரிக்ஸ் கூட்டமைப்பின் 14-வது கூட்டம் சீனாவில் கடந்த 23, 24-ம் தேதிகளில் நடைபெற்றது. இதில், இந்திய பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் பங்கேற்றார்.

இந்த கூட்டத்தில் அல்கிரீயா, அர்ஜெண்டினா, கம்போடியா, எகிப்து, எத்யோப்பியா, ஃபிஜி, இந்தோனேசியா, ஈரான், கஜகஸ்தான், மலேசியா, செனகல், தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் விருந்தினர்களாக பங்கேற்றன.

இந்நிலையில், 'பிரிக்ஸ்' நாடுகள் கூட்டமைப்பில் சேர ஈரான் விண்ணப்பித்துள்ளது. இந்த விண்ணப்பத்தை பிரிக்ஸ் நாடுகள் ஏற்கும்பட்சத்தில் இந்த கூட்டமைப்பில் 6-வது நாடாக ஈரான் இணையும். பிரிக்ஸ் கூட்டமைப்பில் ஈரான் இணையும்பட்சத்தில் இந்த கூட்டமைப்பில் இணையும் முதல் வளைகுடா நாடு என்ற பெருமையை ஈரான் அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story