லண்டன்; வாளைக் கொண்டு பொதுமக்களை தாக்கிய நபர் கைது

லண்டனில் வாளைக் கொண்டு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
லண்டன்,
கிழக்கு லண்டனில் உள்ள ஹைனால்ட் பகுதியில் இன்று காலை 7 மணியளவில் கையில் வாள் ஒன்றை ஏந்திக்கொண்டு சுற்றித்திரிந்த நபர், அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் இரண்டு காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினார். அந்த நபரை போலீசார் உடனடியாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையது அல்ல என்றும், இதனால் பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





