பாகிஸ்தான் பெருவெள்ளம்: நாட்டின் மூன்றில் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளது- மந்திரி தகவல்


பாகிஸ்தான் பெருவெள்ளம்: நாட்டின் மூன்றில் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளது- மந்திரி தகவல்
x

Image Courtesy: AFP

பாகிஸ்தானின் மூன்றில் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளதாக அந்த நாட்டின் மந்திரி ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

லாகூர்,

பாகிஸ்தானில் தென்மேற்கு பருவமழையையொட்டி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. இதனால், நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் உள்ளனர்.

பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்து, மீட்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி வருகிறது.

அந்நாட்டில் தொடர்ந்து மீட்பு, நிவாரண மற்றும் மறுகுடியமர்த்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் விளைவாக பாகிஸ்தானின் மூன்றில் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளதாக அந்த நாட்டின் பருவநிலை மாற்றத்துறை மந்திரி ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

வெள்ளம் ஒரு பெரிய கடல் போல பரவி இருப்பதாகவும் ,வெள்ள நீரை வெளியேற்றுவதற்கு கூட வறண்ட நிலம் இல்லை என ஷெர்ரி ரஹ்மான் கூறியுள்ளார்.


Next Story