கம்போடியாவில் ஆசியான் அமைப்பு பாதுகாப்புத்துறை மந்திரிகள் கூட்டம்: மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்பு!


கம்போடியாவில் ஆசியான் அமைப்பு பாதுகாப்புத்துறை மந்திரிகள் கூட்டம்: மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்பு!
x

ஆசியான் அமைப்பு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு மந்திரிகளின் வருடாந்திர கூட்டம் கம்போடியாவில் நடைபெறுகிறது.

புதுடெல்லி,

ஆசியான் அமைப்பு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்களின் 9வது வருடாந்திர கூட்டம் இன்று கம்போடியாவில் நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்ளுமாறு கம்போடியா துணைப் பிரதமரும், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சருமான சாம்டெக் பிச்சே சேனா டிபான் அழைப்பின் பேரில், பாதுகாப்புதுறை மந்திரி ராஜ்நாத் சிங், 2 நாள் பயணமாக கம்போடியா சென்றுள்ளார். 23-ந் தேதி ஆசியான் பாதுகாப்பு துறை அமைச்சர்கள் கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார்.

மேலும் கம்போடியா பிரதமரையும் ராஜ்நாத்சிங் சந்திக்கிறார். ஆசியான் நாடுகளின் கூட்டம் மற்றும் இந்தியா-ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் தவிர, பாதுகாப்பு அமைச்சர்களுடன் இருதரப்பு விவாதங்களையும் அவர் நடத்துகிறார். இந்த பேச்சுவார்த்தையின் போது, இருதரப்பு பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படுத்துவது குறித்து ராஜ்நாத் சிங் விவாதிக்க உள்ளார்.


Next Story