கனடாவில் வாழும் இந்திய குடிமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சகம் அறிக்கை


கனடாவில் வாழும் இந்திய குடிமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சகம் அறிக்கை
x

கனடாவில் இந்தியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் வேகமாக அதிகரித்துள்ளன.

ஒட்டாவா,

கனடா செல்லும் இந்திய மாணவர்களை கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு அரசு எச்சரித்துள்ளது.

கனடாவில் இந்தியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் வேகமாக அதிகரித்துள்ளன.இந்நிலையில், கனடா செல்லும் இந்தியர்களுக்கு பயண ஆலோசனையை அரசு இன்று வெளியிட்டது.

அதில் கனடாவில் நடக்கும் வெறுப்புக் குற்றச் செயல்கள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டு அதிகாரிகளுடன் வெளியுறவு அமைச்சகம் பேசியதாக கூறப்பட்டுள்ளது.

இந்தக் குற்றங்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கனடா அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர். இதுவரை இந்த குற்றங்களுக்கு காரணமானவர்களுக்கு கனடாவில் எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கண்ட சம்பவங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய குடிமக்கள் மற்றும் மாணவர்கள் கனடாவில் பயணம் செய்யும் போது மற்றும் படிக்கும் போது எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்திய குடிமக்கள் மற்றும் மாணவர்களை ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஆணையரகம் அல்லது டொராண்டோ மற்றும் வான்கூவரில் தூதரகங்களில் பதிவு செய்யுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்திய உயர் ஆணையரகம் மற்றும் தூதரகங்கள் கனடாவில் உள்ள இந்திய பிரஜைகளுடன் தொடர்பில் இருப்பதையும், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் அவர்களை அணுகுவதையும் இது எளிதாக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story