தமிழ்நாடு மீனவர்கள் 3 பேரை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்...!


தமிழ்நாடு மீனவர்கள் 3 பேரை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்...!
x

தமிழ்நாடு மீனவர்கள் 3 பேரை நிபந்தனைகளுடன் விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு,

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் அடிக்கடி நடந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 3 மீனவர்களை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதி தமிழ்நாடு மீனவர்கள் 3 பேரையும் நிபந்தனையுடன் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் 10 ஆண்டுகள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைய கூடாது என நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

ஊர்காவல்துறை நீதிமன்ற உத்தரவின்பேரில் யாழ்ப்பாணம் சிறையில் இருந்த 3 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட 3 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் விரைவில் தமிழகத்திற்கு அழைத்து வரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story