பிலிப்பைன்சை உலுக்கிய 'நால்கே' புயல்: பலி எண்ணிக்கை 100ஐ நெருங்குகிறது! மீட்புப் பணிகள் தீவிரம்!


பிலிப்பைன்சை உலுக்கிய நால்கே புயல்: பலி எண்ணிக்கை 100ஐ நெருங்குகிறது! மீட்புப் பணிகள் தீவிரம்!
x

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சை 'நால்கே' என்கிற சக்தி வாய்ந்த புயல் கடந்த வாரம் தாக்கியது.

மணிலா,

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சை 'நால்கே' என்கிற சக்தி வாய்ந்த புயல் கடந்த வாரம் தாக்கியது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணங்களை குறிப்பாக இந்த புயல் அங்குள்ள மகுயிண்டனாவ் மாகாணத்தை பந்தாடியது. சூறாவளி காற்று சுழன்று அடித்ததில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. கட்டிடங்களின் மேற்கூரைகள் பல மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன.

புயலை தொடர்ந்து பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. இடைவிடாது கொட்டிய பேய் மழையால் மகுயிண்டனாவ் மாகாணத்தின் பல்வேறு நகரங்கள் வெள்ளக் காடாகின. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழந்ததால் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. புயல் மழையை தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன.

இந்நிலையில் புயல், மழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பங்களில் தற்போது பலி எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் 31 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டு முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story