தொழில் நுட்ப கோளாறால் நிறுத்தப்பட்ட ஆர்ட்டெமிஸ்-1 எஸ்எல்எஸ் ராக்கெட்டை மீண்டும் விண்ணில் ஏவுகிறது நாசா...!


தொழில் நுட்ப கோளாறால் நிறுத்தப்பட்ட ஆர்ட்டெமிஸ்-1 எஸ்எல்எஸ் ராக்கெட்டை மீண்டும் விண்ணில் ஏவுகிறது நாசா...!
x
தினத்தந்தி 31 Aug 2022 5:08 AM GMT (Updated: 31 Aug 2022 5:08 AM GMT)

மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை வருகிற செப்டம்டர் 3-ந் தேதி விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

வாஷிங்டன்,

நாசா மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கியுள்ளது. 2025க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா தற்போது ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்ப உள்ளது.

ஆர்ட்டெமிஸ்-1, 42 நாட்களில் சுமார் 1.3 மில்லியன் மைல்கள் பயணிக்கும்.நிலவின் மேற்பரப்பில் இருந்து 60 மைல்களுக்கு அருகில் ஓரியன் விண்கலத்தை பறக்க நாசா திட்டமிட்டுள்ளது. கடந்த 29-ம் தேதி இந்திய நேரப்படி மாலை 6 மணியளவில் ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பும் பணி தொடங்க திட்டமிடப்பட்டது.

கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து இந்த விண்கலம் புறப்படுவதற்கான கவுன்ட்-டவுன் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், எதிர்பாராதவிதமாக சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதன் காரணமாக 40 வது நிமிடத்தின் போது கவுன்ட்-டவுன் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, ஆர்ட்டெமிஸ்-1 திட்ட ஹைட்ரஜன் குழு, ராக்கெட் ஏவுதல் இயக்குனருடன் அடுத்தகட்ட நடவடிக்கைளை பற்றி விவாதித்தனர்.

இந்த நிலையில், மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை வருகிற செப்டம்டர் 3-ந் தேதி விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.



Next Story