கொரோனா அறிகுறி இருந்தால் 10 நாட்கள் தனிமை: உலக சுகாதார அமைப்பு சிபாரிசு


கொரோனா அறிகுறி இருந்தால் 10 நாட்கள் தனிமை: உலக சுகாதார அமைப்பு சிபாரிசு
x

கோப்புப்படம்

அறிகுறி இல்லாதவர்களுக்கு 5 நாள் போதும் என்றும், கொரோனா அறிகுறி இருந்தால் 10 நாட்கள் தனிமையில் இருக்கவும் உலக சுகாதார அமைப்பு சிபாரிசு செய்துள்ளது.

ஜெனீவா,

உலக சுகாதார அமைப்பு, கொரோனா தொடர்பானதிருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்டால், 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளது. அறிகுறி இல்லாவிட்டால், 5 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

தனிமைப்படுத்தும் காலத்தை குறைக்க விரைவு ஆன்டிஜென் பரிசோதனை செய்யுமாறும் தெரிவித்துள்ளது.


Next Story