ஈரோடு கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் -பெரியமாரியம்மன் கோவில் குண்டம் விழா


ஈரோடு கருங்கல்பாளையம்  சின்னமாரியம்மன் -பெரியமாரியம்மன் கோவில் குண்டம் விழா
x

ஈரோடு கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் -பெரியமாரியம்மன் கோவில் குண்டம் விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்.

ஈரோடு

ஈரோடு கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் -பெரியமாரியம்மன் கோவில் குண்டம் விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்.

சின்ன- பெரியமாரியம்மன்

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற சின்னமாரியம்மன் மற்றும் பெரியமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் தேர்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விழா 29-ந்தேதி இரவு 7 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

கடந்த 1-ந்தேதி இரவு 8 மணிக்கு 2 கோவில்களின் முன்பும் கம்பங்கள் நடப்பட்டன. இந்த கம்பத்திற்கு தினந்தோறும் பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் சின்ன மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய கரும்புகள் (விறகு) அடுக்கி வைக்கப்பட்டன. அதன் பின்னர் குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீ பற்ற வைக்கப்பட்டன.

குண்டம் விழா

நேற்று அதிகாலையில் பக்தர்கள் தீ மதிப்பதற்கு வசதியாக குண்டம் தயாரானது. அதைத்தொடர்ந்து காலை 9.30 மணிக்கு கோவிலில் தலைமை பூசாரி குண்டத்திற்கு சிறப்பு பூஜைகளை செய்து முதலில் குண்டம் இறங்கினார். அதைத்தொடர்ந்து வரிசையில் காத்திருந்த திரளான பக்தர்கள் ஒவ்வொருவராக குண்டம் இறங்கினர். அப்போது சுற்றி நின்றிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்கள் எழுப்பினார்கள். பக்தர்கள் சிலர் கைக்குழந்தைகளுடன் தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள். விழாவையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதைத்தொடர்ந்து கோவிலில் தேர்த்திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக தேர் சென்று மீண்டும் கோவிலில் நிலை சேர்ந்தது.

இதில் ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

மாவிளக்கு பூஜை

இன்று (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு கோவில் கரகம் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) பகல் 11 மணிக்கு பக்தர்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைக்கிறார்கள். பின்னர் மாவிளக்கு பூஜை நடக்கிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) இரவில் கம்பம் பிடுங்கும் விழா நடக்கிறது.

அப்போது கம்பம் பிடுங்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காவிரி ஆற்றில் விடப்படுகிறது. வருகிற 15-ந்தேதி காலை 8 மணிக்கு மஞ்சள் நீராடுதல், சாமி திருவீதி உலாவும் இரவு 7 மணிக்கு சாமி திருக்கோவில் நிலை சேருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.


Next Story