சென்னை பத்மாவதி தாயார் ஆலய சிறப்பு அம்சங்கள்


சென்னை பத்மாவதி தாயார் ஆலய சிறப்பு அம்சங்கள்
x

திருச்சானூரில் அருள் பாலிக்கும் பத்மாவதி தாயார் கோவிலை போன்று இந்தியாவில் 2-வதாக சென்னை தியாகராய நகரில் ஜி.என்.செட்டி சாலையில் பத்மாவதி தாயார் அருள் பாலிக்கும் கோவிலுக்கு மன்னர் கால முறையில் கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது.

இக்கோவில் மொத்தம் உள்ள 6 கிரவுண்ட் நிலத்தில் 3 கிரவுண்டில் கோவில் கட்டப்பட்டுள்ளது. மீதம் உள்ள நிலத்தில் மண்டபம், மடப்பள்ளி புஷ்கரணி வாகன நிறுத்துமிடம் போன்றவை அமைந்துள்ளது.

வடக்கு திசையை நோக்கி அமைந்துள்ள இந்த கோவிலின் உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் சின்ன புஷ்கரணி குளம் உள்ளது. அந்த குளத்தை பார்த்து மகிழ்ந்து பின்னர் அருகில் உள்ள துவார பாலகேஷி அம்மனை வழிபடலாம்.

இங்கு 2 அம்மன் சிலைகள் உள்ளன. அங்கு வழிபட்ட பின்னர் கோபுர தரிசனத்தை காணலாம். மூன்று நிலைகள் கொண்ட ராஜகோபுரம், பாஞ்சராத்தர ஆகம விதிப்படி கட்டப்பட்டுள்ளது. இதில் கலை நலயமிக்க சிற்பங்களும் உள்ளன.

கோபுரத்தை தரிசித்துவிட்டு உள்ளே சென்றதும் கருவறையில் வடக்கு திசை நோக்கி பத்மாவதி தாயார் வீற்றிருக்கும் அழகை காணலாம்.

இந்த பத்மாவதி தாயார் சிலை, திருச்சானூர் பத்மாவதி தாயார் ஆலயத்தில் உள்ளது போன்றே பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

தாயாரின் காவல் தெய்வங்களான வனமாலி, பலாக்கினி உள்ளனர்.

கருவறை எதிரே பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு திசை நோக்கி அருளும் அம்மனை மனம் குளிர தரிசனம் செய்து விட்டு வெளியே வந்ததும் இடது புறம் உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அதில் தங்கள் காணிக்கையை செலுத்தலாம்.

கோவில் வளாகத்தில் ராமானுஜர், விஸ்வசேனா சிலைகளும் இடம் பெற்றுள்ளன. கோவில் கருவறையின் கோபுரம் தங்க நிறத்தில் பிரகாசிக்கிறது. கோவிலின் பின் பகுதியில் மடப்பள்ளி வழியாக வந்து கொடி மரத்தையும் சுற்றி வந்து வழிபடலாம்.

கோவில் வளாகத்தில் பக்தர்கள் வசதிக்காக மூன்று வேளையும் மூன்று விதமான அன்ன பிரசாதங்கள் வழங்கப்படுகிறது. மேலும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதியும் செய்யப்பட்டுள்ளது.

கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் தனது மன நிம்மதிக்காக கோவில் வளாகத்தில் அமர்ந்து இறைவனை நினைத்து அமர்ந்து செல்வது வழக்கம். இதற்காகவே அம்மனை தரிசனம் செய்து விட்டு பக்தர்கள் வாளகத்தில் அமர்ந்து தியானம் செய்வதற்கும் இட வசதி உள்ளது.

முன்புறம் கோவிலை பற்றி தகவல்கள் மற்றும் வசதிகள் பற்றி அறிய தகவல் ைமயம் நிர்வாக அலுவலகம் ஆகியவை உள்ளன.

பக்தர்களுக்கு கண்காணிப்பு காமிராக்களுடன் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.


Next Story