கடைசி பந்தில் தோனி சிக்சர் அடிக்க வேண்டும்.... ஆனால்... வைரலாகும் லக்னோ அணி நிர்வாகத்தின் பேனர்கள்


கடைசி பந்தில் தோனி சிக்சர் அடிக்க வேண்டும்.... ஆனால்... வைரலாகும் லக்னோ அணி நிர்வாகத்தின் பேனர்கள்
x

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் லக்னோ - சென்னை அணிகள் மோத உள்ளன.

லக்னோ,

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், லக்னோவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் 34-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் மோதுகின்றன. இந்த ஆட்டம் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் அங்கே வருகை தரும் எம்.எஸ். தோனிக்கு எதிரணி என்று பார்க்காமல் லக்னோ அணி நிர்வாகம் சார்பில் முக்கிய இடங்களில் சாலை ஓரங்களில் பெரிய பேனர்கள் வைத்து வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் ஒரு பேனரில் "எங்களுக்கு தோனி சிறப்பாக விளையாட வேண்டும். அதே சமயம் போட்டியில் லக்னோ வெற்றி பெற வேண்டும்" என்று எழுதப்பட்டுள்ளது. அதேபோல மற்றொரு பேனரில் "எங்களுக்கு கடைசி பந்தில் தோனி சிக்சர் அடிக்க வேண்டும். ஆனால் அப்போது வெற்றி பெறுவதற்கு கடைசி பந்தில் 12 ரன்கள் தேவையாக இருக்க வேண்டும்" என்று எழுதப்பட்டுள்ளது.

மேலும் அந்த 2 பேனர்களின் அடியில் "34வது லீக் போட்டி என்பது 3 மற்றும் 4 சேர்ந்த 7வது நம்பரை குறிக்கிறது. அதற்கு காரணம் தல (தோனியின் ஜெர்சி எண்)" என்றும் எழுதப்பட்டுள்ளது.

அந்த வகையில் எதிரணியாக இருந்தாலும் தோனி நன்றாக விளையாட வேண்டும் என்று மிகவும் மதிப்பளித்து லக்னோ நிர்வாகம் கொடுத்துள்ள இந்த வரவேற்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story