ஆசிய கோப்பை; இந்திய அணியில் தாக்கூருக்கு பதில் இந்த சிஎஸ்கே வீரரை எடுத்திருக்கலாம் - கவுதம் கம்பீர்


ஆசிய கோப்பை; இந்திய அணியில் தாக்கூருக்கு பதில் இந்த சிஎஸ்கே வீரரை எடுத்திருக்கலாம் - கவுதம் கம்பீர்
x

Image Courtesy: AFP

ஆசிய கோப்பை தொடருக்கான (50 ஓவர்) இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

மும்பை,

ஆசிய கோப்பை தொடர் வரும் 30ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொள்கிறது. இந்த தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் கில், கோலி, ஸ்ரேய்ஸ் அய்யர், கே.எல்.ராகுல், பாண்ட்யா, ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பும்ரா, இஷான் கிஷன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல், முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோரும் சஞ்சு சாம்சன் மாற்று வீரராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக ஷிவம் துபேவை எடுதிருக்கலாம் என கவுதம் கம்பீர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இது ஓரளவு நல்ல அணியாகும். என்னை பொறுத்த வரை இது நன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ள அணியாகவே பார்க்கிறேன். ஆனால் இதில் ஒரு லெக் ஸ்பின்னர் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் தற்சமயத்தில் இது அதிக வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ள அணியாக தெரிகிறது. எனவே அதில் நீங்கள் ரவி பிஷ்னோய் அல்லது சஹாலை தேர்வு செய்திருக்கலாம்.

தற்போது பிரசித் கிருஷ்ணா இருக்கும் பார்முக்கு நீங்கள் முகமது ஷமியை வெளியேற்றி விட்டு ஏதேனும் ஒரு லெக் ஸ்பின்னரை தேர்வு செய்திருக்கலாம் என்றாரர்.

மேலும், அதே போல ஷிவம் துபே இருக்கும் பார்முக்கு அவரையும் நீங்கள் கணக்கில் எடுத்திருக்கலாம். ஏனெனில் நீங்கள் ஏதோ ஒரு வகையில் ஹர்திக் பாண்டியாவுக்கு பேக்-அப் வீரரை வைத்திருக்க வேண்டும்.

தற்போதுள்ள ஷார்துல் தாக்கூர் ஹர்திக் பாண்டியாவுக்கு எந்த வகையிலும் பேக்-அப் வீரராக இருக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story