2024-ஐபிஎல்-ல் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக வீரர்கள்


2024-ஐபிஎல்-ல் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக வீரர்கள்
x

2024-ஐபிஎல்-ல் இருந்து 3 தமிழக வீரர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

புதுடெல்லி,

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது. இதையொட்டி விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க ஐ.பி.எல். அமைப்பு காலக்கெடு கொடுத்திருந்தது. அது இன்றுடன் முடிவடைகிறது.

இதனால், ஒவ்வொரு அணியும் விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், 2024-ஐபிஎல்-ல் இருந்து 3 தமிழக வீரர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து ஜெகதீசனும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து முருகன் அஸ்வினும், பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து ஷாருக் கானும் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.


Next Story