மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் ; இந்திய அணிக்கு 75 ரன்கள் இலக்கு..!


மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் ; இந்திய அணிக்கு 75 ரன்கள் இலக்கு..!
x

image courtesy; twitter/ @ICC 

ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்சில் 261 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

மும்பை,

ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 21ம் தேதி டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 219 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 119 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 376 ரன்கள் குவித்து, 157 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையை எட்டியிருந்தது. இந்நிலையில் 3ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 406 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

பின்னர் 187 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. 105.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்சில் 261 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணிக்கு 75 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது ஆஸ்திரேலியா. அந்த அணியில் அதிகபட்சமாக தஹ்லியா மெக்ராத் 73 ரன்கள் அடித்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக சினே ராணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 75 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.


Next Story