உலகக்கோப்பை இந்தியா- ஆஸ்திரேலியா போட்டி: 10 நிமிடத்தில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்.!


உலகக்கோப்பை இந்தியா- ஆஸ்திரேலியா போட்டி: 10 நிமிடத்தில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்.!
x

அக்டோபர் 8-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

சென்னை,

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்(50 ஓவர்) அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அக்டோபர் 8-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. தொடர்ந்து அக்டோபர் 11-ந்தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் ஆட்டமும், அக்டோபர் 19-ந்தேதி புனே எம்.சி.ஏ. மைதானத்தில் இந்தியா-வங்காளதேசம் இடையிலான ஆட்டமும் நடைபெறுகிறது.

இந்த 3 போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று இரவு 8 மணி முதல் டிக்கெட்டுகள் 'புக் மை ஷோ' இணையதளம் மூலம் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டது.

இதில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை தொடங்கிய 10 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தன.


Next Story