ஆசிய ஆண்கள் 5 பேர் ஆக்கி; முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி..!

image courtesy; twitter/@TheHockeyIndia
வங்காளதேசத்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
சலாலா,
அடுத்த ஆண்டு நடைபெறும் முதலாவது 5 பேர் ஆக்கி உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி சுற்றான ஆசிய மண்டல ஆண்கள் போட்டி ஓமன் நாட்டின் சலாலா நகரில் நேற்று (செவ்வாய்கிழமை) தொடங்கியது.
இதில், இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 15-1 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை பந்தாடியது. இந்திய அணி தரப்பில் சிங் மனிந்தர் 4 கோல்கள் அடித்து அசத்தினார். மேலும் ரஹீல் முகமது ஹாட்ரிக் கோல் பதிவு செய்தார். இன்றைய ஆட்டங்களில் ஓமன் மற்றும் பாகிஸ்தானை இந்தியா சந்திக்கிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





