ஆசிய ஆண்கள் 5 பேர் ஆக்கி; முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி..!
வங்காளதேசத்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
சலாலா,
அடுத்த ஆண்டு நடைபெறும் முதலாவது 5 பேர் ஆக்கி உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி சுற்றான ஆசிய மண்டல ஆண்கள் போட்டி ஓமன் நாட்டின் சலாலா நகரில் நேற்று (செவ்வாய்கிழமை) தொடங்கியது.
இதில், இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 15-1 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை பந்தாடியது. இந்திய அணி தரப்பில் சிங் மனிந்தர் 4 கோல்கள் அடித்து அசத்தினார். மேலும் ரஹீல் முகமது ஹாட்ரிக் கோல் பதிவு செய்தார். இன்றைய ஆட்டங்களில் ஓமன் மற்றும் பாகிஸ்தானை இந்தியா சந்திக்கிறது.
Related Tags :
Next Story