புரோ கபடி லீக் அரைஇறுதி: தமிழ் தலைவாஸ் அணி அதிர்ச்சி தோல்வி..!!


புரோ கபடி லீக் அரைஇறுதி: தமிழ் தலைவாஸ் அணி அதிர்ச்சி தோல்வி..!!
x

புரோ கபடி லீக் அரைஇறுதி போட்டியில் தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி வெற்றிபெற்றது.

மும்பை,

9-வது புரோ கபடி லீக் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் இன்று (வியாழக்கிழமை) இரண்டு அரைஇறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இரவு 7.30 மணிக்கு நடந்த முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, 49-29 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு முன்னேறியது.

இந்த சூழலில் இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற 2-வது அரைஇறுதியில் அஜிங்யா பவார் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, பாசெல் அட்ராசலி தலைமையிலான புனேரி பால்டனை எதிர்கொண்டது.

பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் புனேரி பால்டன் அணியிடம் 39-37 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது. இதன்மூலம் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய தமிழ் தலைவாஸ் அணியின் கோப்பையை வெல்லும் கனவு தகர்ந்தது.

புரோ கபடி லீக் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் பெங்களூரு புல்சை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி இறுதிபோட்டிக்கு முன்னேறிய நிலையில், இரண்டாவது அரையிறுதி போட்டியில் தமிழ் தலைவாசை வீழ்த்தி புனேரி பால்டன் அணி இறுதிபோட்டிக்கு முன்னேறி உள்ளது.

இந்நிலையில் வரும் 17ம் தேதி (சனிக்கிழமை) நடக்கும் மகுடத்திற்கான இறுதிப்போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியுடன், புனேரி பால்டன் அணி மோதுகிறது.


Next Story