புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி உ.பி. யோத்தாஸ் வெற்றி..!

Image Courtesy: @ProKabaddi
12 அணிகள் கலந்து கொண்டுள்ள 10-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது.
பெங்களூரு,
10-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் உ.பி. யோத்தாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் உ.பி. யோத்தாஸ் அணி 48-33 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
Related Tags :
Next Story






