பஸ் சக்கரத்தில் சிக்கி பிளஸ்-1 மாணவரின் கை சிதைந்தது

புதுவையில் பஸ் சக்கரத்தில் சிக்கி பிளஸ்-1 மாணவரின் கை சிதைந்தது.
பஸ் சக்கரத்தில் சிக்கி பிளஸ்-1 மாணவரின் கை சிதைந்தது
Published on

வில்லியனூர்

கரிக்கலாம்பாக்கம் தனத்துமேடு ஜெயகணேஷ் நகரைச் சேர்ந்தவர் முருகன் (வயது 35). கூலித்தொழிலாளி. அவரது மகன் சசிதரன் (15). இவர் ஏம்பலம் மறைமலையடிகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை இவர், பள்ளி முடிந்து தனியார் பஸ்சில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். இந்த பஸ் கோர்க்காடு குளத்துமேட்டு தெரு பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றபோது சசிதரன் பஸ்சில் இருந்து கீழே இறங்கினார். அப்போது திடீரென டிரைவர் பஸ்சை எடுத்ததால் சசிதரன் தவறி கீழே விழுந்தார். இதில் பஸ் சக்கரத்தில் சிக்கியதில் வலது கை சிதைந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின்பேரில் வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் பண்ருட்டியை சேர்ந்த ராஜ்குமார் (44) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com