கார் மோதி வாலிபர் பலி

கார் மோதி வாலிபர் பலியானார்.
கார் மோதி வாலிபர் பலி
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள இடையவர்வலசையை சேர்ந் தவர் மனோகரன் என்பவரின் மகன் சந்துரு (வயத23). இவர் தான் வேலைபார்க்கும் நிறுவனத்தில் இருந்து மொபட் டில் கிழக்கு கடற்கரை சாலையில் ஏறியபோது ரெகுநாதபுரத்தில் இருந்து தேவிபட்டிணம் நோக்கி சென்ற கார் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட சந்துரு படுகாயமடைந்து ராமநாத புரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் தேவிபட்டிணம் கழனிக் குடியை சேர்ந்த முனியசாமி மகன் விஜய் (27) என்பவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com