விபத்தில் மாணவன் சாவு

திருப்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-2 மாணவர் இறந்தார்.
விபத்தில் மாணவன் சாவு
Published on

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே கோட்டையிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவருடைய மகன் கோபி (வயது 17). அதே ஊரைச் சேர்ந்த கருப்பையா மகன் சதீஷ் (17). பிளஸ்-2 மாணவன். இவர்கள் இருவரும் உள்ளூரில் நடந்த திருமண விழாவிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று கோபி பிரேக் போட்டதில் மோட்டார் சைக்கிளில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர். காயம் அடைந்த 2 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சதீஷ் இறந்தார். கோபி காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து திருப்பத்தூர் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com