அந்தப் படத்தோட பார்ட் -2 வந்தா கண்டிப்பா நடிப்பேன் - நடிகர் சந்தானம்

இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் படம் கேப்டன். இப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அந்தப் படத்தோட பார்ட் -2 வந்தா கண்டிப்பா நடிப்பேன் - நடிகர் சந்தானம்
Published on

டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, ஆர்யா நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன்'. டெடி திரைப்படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணி மீண்டும் இணைந்து செயல்படுவதால், இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். 'கேப்டன்' திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. "கேப்டன்" திரைப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகர் சந்தானம் பேசியதாவது, "நான் ஆர்யாவிடம் முன்பே கூறியிருந்தேன் பாஸ் (எ) பாஸ்கரன் 2 அல்லது வேறு படம் எடுத்தால் கண்டிப்பாக நான் உன்னுடன் இணைந்து நடிப்பேன் என்று, அந்த அளவிற்கு ஒரு உண்மையான நண்பன் ஆர்யா.

நான் காமெடியனாக இருக்கும் போதே என்னை ஹீரோ மாதிரி இருக்கணும் என்று அதிகம் ஊக்கப்படுத்துவார். பாஸ் (எ) பாஸ்கரன் படத்திலும் எனக்கு நிறைய ஸ்பேஸ் கொடுத்தார். ஆர்யாவின் எந்த ஒரு படமாக இருந்தாலும் அங்கு என் அன்பும் ஆதரவும் கண்டிப்பாக இருக்கும்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com